14 ஆக., 2017

சுயநல சூறாவளியா? பொதுநல போராளியா?

பசி அறியான் யாருமில்லை
பல சுவை சுவைத்தபின்பும்
நா விரும்பிவிட்டால் பொதுநலம் பொடியாகிறது.
தேவைக்கு அளித்தால் தேவதை
தேவையை தூண்டினால் தீவதை
தீவதையை போக்க வணிகம் செய்தால்?
சுயநல சூறாவளியேதான்
அங்கே படி இங்கே படி என பல படி நாடி தினம் ஓடி
வரும் தாடி ஆனால் வராது வேலை தேடி
நீ போவாய்  நாடி ஆனால் அவன்தருவான் தேடி
தன் சூழலை உணர்ந்து மாறு என்பான் அவன் சூழலை உணராமலே
சட்டமும் கட்டமும் மாறும் ஆனால்  வட்டமல்ல
திட்டத்தை கேட்டு விட்டத்தை விழிப்பதை விட நாட்டத்தை தீட்டலாம்  வாட்டமாவது ஓடும்
தேவைக்கு மட்டும் கொடுத்தால் நல்வணிகம்
தேவையும் அளிப்பும் இயல்பாய் இருத்தல் தேவை
விளம்பரங்கள் அல்ல
போட்டி சிறந்த தரத்திற்கும் விளம்பரத்திற்குமே தேவை
விளம்பரத்திற்கிடையே அல்ல
சுயநலத்தை சூழல் பின்னால் காரணம் காட்டி தோரணம் கொண்டு தோற்கடித்தாலும் பொறுத்துகொள்வர்
சுயநலமாகாது சூழலின் தேவைகள்
போட்டியின்றி வேட்டையாடி கோட்டை கொட்டகையை சொட்டையாக்க நினைப்பவைகளே சுயநல சூறாவளி
சுயநலம் சுயநல சூறாவளியானபோதெல்லாம்
தோன்றியுள்ளார்கள் பொதுநல போராளிகள்!


27 மார்., 2015

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!


பின்வாங்காமையே உன்னை பிரபலபடுத்தும் 
         கௌரவத்துடன் தன்னடக்கம் உன்னை முடுக்கமடைய செய்யும் 
ரசிப்பதில் ஒழுக்கம் இருந்தால் நீ ரசிப்பது உன்னை அடையும் 
          சந்தோசமாக இருக்க நினைத்தால் சிரிக்கவும், சிந்திக்கவும் மறக்காதீர் 
காலம் கண் போன்றது, காத்திருத்தல் இமை போன்றது 
          ல்வாழ்க்கை இளநீர் போன்றது பருக தவறாதீர்கள் 
ஷ்டப்பட்டது நிச்சயம் கிடைக்கும் கஷ்டப்பட்டால் மட்டுமே 
          யாருக்காகவும், எதற்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே, ஒப்பிடாதே 
குறைவான எதிர்மனப்பான்மையே உன்னை நிறைவாக்கும்
          மாவீரன் நீ மட்டுமே என நினை, உன் முன் நிற்கும் சவால்களை                                                                                                                                                         - எதிர்கொள்ள 
ர்  நீ நீயாக இரு நீரைப்போல, எங்கும்  எதிலும் கிடைக்கும் வெற்றி நிச்சயம்!